> > தீ மற்றும் மீட்பு பணிகள்

தீ மற்றும் மீட்பு பணிகள்

மாநில காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை துறை

மாநில காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை துறை பேரிடர் அவரச காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கய பங்காற்றி வருகிறது. மாநில காவல்துறை தனது வலுவான தகவல் தொடர்பு வலையமைப்பு வசதியினால் அனைத்து பேரிடர் சூழ்நிலைகளுக்கும் தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டு பேரிடர் காலங்களில், நிகழவிற்கும் கொள்ளை, சொத்துக்கள் அழிதல் மற்றும் திருட்டு ஆகியவற்றிலிருந்து தடுத்து சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றவும் ஆகிய உடனடி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கூட்டத்தை நிர்வகித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதில் இத்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை என்பது பல துறைகள் ஒன்றினைந்து செயல்படும் ஒரு அமைப்பாகும், இது அவசரகால சூழ்நிலைகளில் பல்நிலை பணிகளை செய்வதில் அறிய பங்களிப்பை செயல்படுத்தி வருகிறது. இத்துறை இயற்கை பேரிடர்களின் போது மீட்பு நடவடிக்கைகளையும், கடினமான மற்றும் அணுக முடியாத இடங்களில் சிக்கி தவிக்கும் மனிதர்களையும், விலங்குகளையும் மீட்பதற்கான அவசர அழைப்புகளுக்கு உடனடி பதிலளித்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது. வாகன இடிபாடுகளில் இருந்து அகற்றுதல், மனிதர்களின் சடலங்களை மீட்டெடுத்தல், நீர்நிலைகளில் இருந்து விலங்குகளின் சடலங்களை அகற்றுதல் மற்றும் காணாமல் போன மனிதர்களைக் கண்டறிய மோப்ப நாய்க் குழுவை அனுப்பி மீட்டெடுத்தல் ஆகிய பணிகள் இத்துறையால் வழங்கப்படும் இன்னும் பிற, சில அவசர சேவைகளாகும். பயங்கரவாதத் தாக்குதல்கள், ஜாதி மற்றும் வகுப்புவாத மோதல்கள் போன்ற அச்சுறுத்தல்களின் சமயங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுத்தல், திருவிழாக்கள் மற்றும் திருவிழாக்களின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் ஆகிய பணிகளை, இத்துறை வருவாய் மற்றும் மருத்துவம் போன்ற பிற துறைகளுடன் ஒற்றினைந்து செயல்படுத்தி வருகிறது. வெள்ளம் மற்றும் சூறாவளிகள், நிலச்சரிவுகள், கட்டிட இடிபாடுகள், நிலநடுக்கம், தொழிற்சாலை வெடிப்புகள் மற்றும் சாலை/ரயில் விபத்துக்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகளின் போது மீட்பு நடவடிக்கைகளை மிகவும் திறம்பட மேற்கொள்வதற்காக, இந்தத் துறைக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

எழிலகம், காமராஜர் ஊர்வலம்,
PWD எஸ்டேட், சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,
சென்னை, தமிழ்நாடு 600005

JD: 9444446559

வரைபடம்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்

  VISITORS STATS

Today

31

Overall

10702